பன்றிக் காய்ச்சலுக்கு கோவையில் மேலும் இரண்டு பெண்கள் பலி

கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட மர்மக்காய்ச்சல்கள் வெகுவேகமாக மக்கள் மத்தியில் பரவி வருகிறது. இதனால், அன்றாடம் சிலர் உயிரிழப்பதும் வாடிக்கையாகி விட்டது.

இந்நிலையில், கோவை மாவட்டம், கே.ஜி.சாவடி பகுதியைச் சேர்ந்த பழனியம்மாள் (57) மற்றும் அதேப் பகுதியைச் சேர்ந்த வசந்தா மேரி ஆகிய இருவருக்கும் கடந்த 10 நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது.

இதற்காக அவர்கள் அப்பகுதியிலேயே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்களுக்கு இரத்த பரிசோதனையில் ஈடுபட்ட அம்மருத்துவமனை மருத்துவர்கள் அவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பதை உறுதிசெய்தனர்.

இதைத்தொடர்ந்து, பழனியம்மாளும், வசந்தாதேவியும் சிகிச்சைக்காக கடந்த இரு நாட்களுக்கு முன்பு கோவை அரசு பொது மருத்துவமனையில் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், நேற்று மாலை பழனியம்மாளும், இரவு வசந்தாமேரியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதனிடையே, கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சலின் பாதிப்பால் 35 பேரும், டெங்கு காய்ச்சலால் 7 பேரும் மற்றும் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 22 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...