கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட மர்மக்காய்ச்சல்கள் வெகுவேகமாக மக்கள் மத்தியில் பரவி வருகிறது. இதனால், அன்றாடம் சிலர் உயிரிழப்பதும் வாடிக்கையாகி விட்டது.
இந்நிலையில், கோவை மாவட்டம், கே.ஜி.சாவடி பகுதியைச் சேர்ந்த பழனியம்மாள் (57) மற்றும் அதேப் பகுதியைச் சேர்ந்த வசந்தா மேரி ஆகிய இருவருக்கும் கடந்த 10 நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது.
இதற்காக அவர்கள் அப்பகுதியிலேயே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்களுக்கு இரத்த பரிசோதனையில் ஈடுபட்ட அம்மருத்துவமனை மருத்துவர்கள் அவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பதை உறுதிசெய்தனர்.
இதைத்தொடர்ந்து, பழனியம்மாளும், வசந்தாதேவியும் சிகிச்சைக்காக கடந்த இரு நாட்களுக்கு முன்பு கோவை அரசு பொது மருத்துவமனையில் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், நேற்று மாலை பழனியம்மாளும், இரவு வசந்தாமேரியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதனிடையே, கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சலின் பாதிப்பால் 35 பேரும், டெங்கு காய்ச்சலால் 7 பேரும் மற்றும் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 22 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கோவை மாவட்டம், கே.ஜி.சாவடி பகுதியைச் சேர்ந்த பழனியம்மாள் (57) மற்றும் அதேப் பகுதியைச் சேர்ந்த வசந்தா மேரி ஆகிய இருவருக்கும் கடந்த 10 நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது.
இதற்காக அவர்கள் அப்பகுதியிலேயே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்களுக்கு இரத்த பரிசோதனையில் ஈடுபட்ட அம்மருத்துவமனை மருத்துவர்கள் அவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பதை உறுதிசெய்தனர்.
இதைத்தொடர்ந்து, பழனியம்மாளும், வசந்தாதேவியும் சிகிச்சைக்காக கடந்த இரு நாட்களுக்கு முன்பு கோவை அரசு பொது மருத்துவமனையில் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், நேற்று மாலை பழனியம்மாளும், இரவு வசந்தாமேரியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதனிடையே, கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சலின் பாதிப்பால் 35 பேரும், டெங்கு காய்ச்சலால் 7 பேரும் மற்றும் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 22 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.