தாராபுரம் அருகே ரூ.190 கோடியில் 25 மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டம் - அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்

தாராபுரம் அடுத்த வடுகப்பட்டியில் ரூ.190 கோடி மதிப்பில் கோவையை சேர்ந்த தனியார் நிறுவனம் சார்பில் 110 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள 110/33 கிலோ வாட் தனியார் துணைமின் நிலையம், 25 மெகாவாட் சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தி திட்டத்தை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.


திருப்பூர்: தாராபுரம் அருகே ரூ.190 கோடி மதிப்பில் 25 மெகாவாட் சூரியஒளி மின்சக்தி உற்பத்தி திட்டத்தை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குமாரபாளையம் ஊராட்சிக்குட்பட்ட வடுகப்பட்டியில் 190 கோடி மதிப்பில் கோவையைச் சேர்ந்த மின் சக்தி நிறுவனமான நற்றிணை வென்ச்சர்ஸ் சார்பில் 110 ஏக்கரில் 110/33 கிலோ வாட் தனியார் துறை துணை மின் நிலையம் மற்றும் 25 மெகாவாட் சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தி திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.



இதன் திறப்பு விழா நிகழ்ச்சியில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மின்சக்தி உற்பத்தி திட்டத்தை தொடங்கி வைத்தனர்.



இந்நிகழ்ச்சியில் கோவை மண்டல மின்சார வாரிய முதன்மை பொறியாளர் வினோதன், திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டல தலைவர் பத்மநாபன், இந்திய காற்றாலை மின் உற்பத்தி உரிமையாளர்கள் சங்க தலைவர் கஸ்தூரிரங்கன் உட்பட ஏராளமான தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...