கோவையின் பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் செல்வபுரம், தெற்கு பேரூர் பகுதி-II, சி.எம்.சி காலனி பகுதி-II. வெரைட்டி ஹால் ரோடு ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை மாவட்ட ஆட்சியர் மேற்கொண்டார்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் செல்வபுரம், தெற்கு பேரூர் பகுதி-II, சி.எம்.சி காலனி பகுதி-II. வெரைட்டிஹால் ரோடு, ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின் போது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் ஜெகநாதன், உதவி நிர்வாக பொறியாளர்கள் ராஜேந்திரன், சுதர்சன் உடனிருந்தனர்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பேரூர் வடக்கு பகுதி 1 பேரூர் தெற்கு பகுதி-2 எழில் நகர், வெரைட்டிஹால் ரோடு, பச்சனம்பதி, எம்.ஜி.ஆர் நகர், வால்பாறை, உக்கடம் பகுதி 4. சிக்கதாசம் பாளையம், சுந்தரம் வீதி, சி.எம்.சி.காலனி , சித்தாப்பதூர் பகுதி-2 முல்லை நகர் ஆகிய இடங்களில் 15 திட்டப்பணிகள் மூலம் 4283 குடியிருப்புகள் 389,91 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்றது.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் செல்வபுரம் பகுதியில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் அனைத்து அடிப்படை வசதிகளுடன் ரூ.46.44 கோடி திட்ட மதிப்பீட்டில் ஒவ்வொரு குடியிருப்பும் ரூ.8.80 லட்சம் செலவில் 528 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

தெற்கு பேரூர் பகுதி-II திட்டப்பகுதியில் ரூ.25.63 கோடி திட்ட மதிப்பீட்டில் ஒவ்வொரு குடியிருப்பும் ரூ.8.90 லட்சம் செலவில் 288 குடியிருப்புகளும், வெரைட்டிஹால் ரோடு திட்டப்பகுதியில் ரூ.45.05 கோடி திட்ட மதிப்பீட்டில் ஒவ்வொரு குடியிருப்பும் ரூ.10.05 லட்சம் செலவில் 448 குடியிருப்புகளும், சி.எம்.சி காலனி பகுதி-II திட்டப்பகுதியில் ரூ.49,40 கோடி திட்ட மதிப்பீட்டில் ஒவ்வொரு குடியிருப்பும் ரூ.9.50லட்சம் செலவில் 520 குடியிருப்புகளும் கட்டப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு குடியிருப்பும் ஒரு வரவேற்பறை, ஒரு படுக்கை அறையும், ஒரு சமையலறை, குளியலறை, கழிவறை மற்றும் பயன்பாட்டு பகுதியுடன் கட்டப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து, செல்வபுரம், தெற்கு பேரூர் பகுதி-11. சி.எம்.சி காலனி வெரைட்டிஹால் ரோடு, ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை தரமாகவும்,விரைவாகவும் முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...