அதானி ஊழல் விவகாரத்தில் பிரதமர் மௌனம் காப்பது ஏன்? -தாராபுரம் தெருமுனை பிரச்சாரத்தில் சி.பி.எம் கேள்வி!

தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனை பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில், அதானி ஊழல் விவகாரத்தில் பிரதமர் மௌனம் காப்பது உள்ளிட்ட ஜனநாயக விரோத நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.


திருப்பூர்: தாராபுரத்தில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனை பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனை பிரச்சாரம் இயக்கம் நடைபெற்றது. இப்பிரசாரத்திற்கு சிபிஎம் தாலூகா செயலாளர் கனகராஜ் தலைமை வகித்தார்.

பிரச்சாரத்தின் போது நாட்டில் நிலவி வரும் வேலையின்மை, விலைவாசி உயர்வு, வறுமை, மக்கள் வாழ்வாதாரங்கள் மீது தொடர் தாக்குதல், பாஜக அல்லாத மாநில அரசுகளுக்கு எதிராக மாநில உரிமைகளை பறிப்பது, அதானி ஊழல் விவகாரத்தில் பிரதமர் மௌனம் காப்பது உள்ளிட்ட ஜனநாயக விரோத நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

பிரச்சார இயக்கத்தின் போது கூட்டுக்களவாணிகளின் ஊழல் சாம்ராஜ்யம் குற்றவாளிக்கூண்டில் அதானி - மோடி பிரசுரம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் ஆர்.வெங்கட்ராமன், பி.பொன்னுச்சாமி, மேகவர்ணன், கண்ணுசாமி, கோவிந்தராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...