ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அளித்துள்ள அனுமதியை திரும்பப்பெற வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தல்


புதுக்கோட்டையில் ஹைட்ரோ கார்பன் திட்டதிற்கு அளித்த அனுமதியை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும், தமிழக அரசு மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

சேலம் மற்றும் ஈரோடு பகுதிகளில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், வர்தா புயலுக்கு மத்திய அரசு இதுவரை நிவாரணம் எதுவும் வழங்கவில்லை. தற்போது தமிழக அரசு ஒதுக்கியுள்ள நிதி போதுமானதாக இல்லை என தெரிவித்தார்.

மேலும், புதுக்கோட்டையில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்து இருப்பது கண்டிக்கத்தக்கது எனவும், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் 25 ஆண்டுகளுக்கு பின்பு டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும் எனவும் குறிப்பிட்டதுடன் மத்திய அரசு அனுமதியை உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும் அதற்காக தமிழக அரசு மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாகவும், ஆணவ கொலைகள் தடுப்பு சட்டம் ஒன்றை தமிழக அரசு கொண்டு வர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்ட திருமாவளவன், தருமபுரி இளவரசன் வழக்கு சிபிசிஐடி-க்கு கொடுக்கப்பட்ட போதே இந்த முடிவை தாங்கள் எதிர்பார்த்ததாகவும், தற்போது இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீட்டிற்கு  செல்ல வேண்டும் என்பதே தங்களின் கருத்து எனவும் கூறினார்.

சட்டமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு என்பது அவை விதிகளில் இல்லை என சொல்லப்பட்டாலும், சட்டப்பேரவை தலைவர் எதிர்கட்சி தலைவரின் கோரிக்கையை நிறைவேற்றி இருக்கலாம் எனவும், சட்டமன்றத்தில் சபாநாயகர் சாதியின் அடிப்படையில் இழிவுபடுத்தப்பட்ட நிகழ்வு நடைபெற்று இருந்தால் தமிழக முதலமைச்சர் அதை வெளிப்படையாக கூற வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியதுடன், முதலமைச்சர் ஏன் இது குறித்து எதுவும் பேசவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...