கோவை நரசீபுரம் தனியார் கல்லூரியில் புகுந்து மாணவி மீது தாக்குதல் - ஆட்டோ ஓட்டுநர் கைது!

கோவை நரசீபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் புகுந்து கல்லூரி மாணவியை தாக்கிய ஷேர் ஆட்டோ ஓட்டுநர் பிரவின் (22) என்பவரை ஆலாந்துறை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: நரசிபுரத்தில் தனியார் கல்லூரியில் புகுந்து மாணவியை தாக்கிய ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் அறிவொளி நகர் பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் நரசீபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் (சிஏ) 2ஆம் ஆண்டு படித்து வருகிறார்.

இவரும் கோவைப்புதூர் அறிவொளி நகர் பகுதியை சேர்ந்த ஷேர் ஆட்டோ ஓட்டுநர் பிரவீன் (22) என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, ஆட்டோ ஓட்டுனர் பிரவீன் மதுபோதைக்கு அடிமையானதன் காரணமாக கடந்த 6 மாதங்களாக இளம்பெண், பிரவீனுடன் பேசுவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று மாலை நரசீபுரம் கல்லூரிக்கு சென்ற பிரவீன் கேன்டீனில் நின்று கொண்டிருந்த மாணவியின் கையை பிடித்து இழுத்து தாக்கியுள்ளார்.

இதையடுத்து அங்கிருந்த மாணவர்கள் பிரவீனை பிடித்து ஆலாந்துறை போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து, போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், கல்லூரி மாணவியை தாக்கி மிரட்டல் விடுத்த பிரவீனை, கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...