ஓடுபாதை புனரமைப்பு பணிகள் நிறைவு - 24 மணி நேர செயல்பாட்டுக்கு வந்த கோவை விமான நிலையம்!

கோவை விமான நிலையத்தில் நடந்து வந்த புனரமைப்பு பணிகளால் வருகை மற்றும் புறப்பாடு நேரம் மாற்றியமைக்கப்பட்ட ஷார்ஜா மற்றும் சிங்கப்பூர் விமானங்கள் மீண்டும் பழைய நேரப்படியே இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை சர்வதேச விமான நிலைய ஓடுபாதை புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததால் நேற்று முன்தினம் முதல் மீண்டும் 24 மணி நேர செயல்பாட்டுக்கு வந்தது.

விமான நிலையங்களில் உள்ள ஓடுபாதை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புனரமைக்கப்படுவது வழக்கம். அதன்படி, கோவை சர்வதேச விமான நிலையத்தில் இப்பணிகள் கடந்தாண்டு 2022 ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கியது. ஓராண்டுக்குப் பின் தற்போது பணிகள் முழுவதும் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, ஷார்ஜா விமானம் தரையிறங்கும், புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:

கோவையில் விமான ஓடுபாதை 2.9 கி.மீ., பரப்பில் அமைந்துள்ளது. புனரமைப்பு பணிகள் மிகவும் நேர்த்தியாக மேற்கொள்ளப்பட்டன. சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்த பணிகள் தொடர் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக சற்று தாமதமடைந்தன.

இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் காற்றின் அதிக ஈரப்பதம் உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் டிசம்பர் மாதத்தில் நிறைவடைய திட்டமிடப்பட்ட பணிகள் தற்போதுதான் நிறைவடைந்துள்ளன.

இதையடுத்து, நேற்று முதன்தினம் மார்ச் 27(திங்கட்கிழமை) முதல் கோவை விமான நிலையம் மீண்டும் 24 மணி நேர செயல்பாட்டுக்கு வந்தது. புனரமைப்பு பணிகளால் வருகை மற்றும் புறப்பாடு நேரம் மாற்றியமைக்கப்பட்ட ஷார்ஜா மற்றும் சிங்கப்பூர் விமானங்கள் மீண்டும் பழைய நேரப்படியே இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் முதல் ஷார்ஜா விமானம் அதிகாலை 4 மணியளவில் கோவையில் தரையிறங்கி மீண்டும் 4.45 மணியளவில் ஷார்ஜா புறப்பட்டு செல்ல தொடங்கியுள்ளது. சிங்கப்பூர் விமானம் உள்பட சென்னை, பெங்களூரு உள்ளிட்ட உள்நாட்டு விமான சேவைகள் முன்பு இரவு 11 மணி வரை மற்றும் அதிகாலை வழங்கப்பட்டு வந்த நிலையில், விரைவில் அவற்றின் சேவை நேரங்கள் மாற்றியமைக்க வாய்ப்பு உள்ளது.

கோடை விடுமுறை காலம் விரைவில் தொடங்க உள்ளதால் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து பல புதிய அறிவுப்புகளை எதிர்பார்க்கலாம்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...