நீலகிரி மாவட்டம் உதகையில் நடப்பாண்டிற்கான கோடை விழா வரும் மே மாதம் 6-ந்தேதி தொடங்குகிறது. புகழ்பெற்ற ஊட்டி மலர் கண்காட்சி மே.19-ந்தேதி தொடங்கவுள்ளதாக ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார்.
உதகையில் உள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சிதலைவர் அம்ரித் தலைமையில் கோடை விழா குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதில், மே 6-ந் தேதி முதல் கோடை விழா தொடங்கவும், முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் 12-வது காய்கறி கண்காட்சியை மே.6 மற்றும் 7-ந்தேதி என 2 நாட்கள் நடத்த முடிவு செய்யபட்டது.
அதனை தொடர்ந்து, மே 12, 13, 14 ஆகிய தேதிகளில் கூடலூரில் 10-வது வாசனை திரவிய கண்காட்சி நடத்தவும், அதேபோல், மே 13, 14 மற்றும் 15-ந் தேதிகளில் உதகை ரோஜா பூங்காவில் 18-வது ரோஜா கண்காட்சி நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

குறிப்பாக மே 19, 20, 21, 22, 23 ஆகிய 5 தேதிகளில் பிரத்திபெற்ற 125-வது மலர் கண்காட்சி உதகை தாவரவியல் பூங்காவில் நடைப்பெறுகிறது.
மே 27, 28 ஆகிய தேதிகளில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 63-வது பழக்கண்காட்சியை நடத்தவும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் சிவ சுப்ரமணியம், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அதில், மே 6-ந் தேதி முதல் கோடை விழா தொடங்கவும், முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் 12-வது காய்கறி கண்காட்சியை மே.6 மற்றும் 7-ந்தேதி என 2 நாட்கள் நடத்த முடிவு செய்யபட்டது.
அதனை தொடர்ந்து, மே 12, 13, 14 ஆகிய தேதிகளில் கூடலூரில் 10-வது வாசனை திரவிய கண்காட்சி நடத்தவும், அதேபோல், மே 13, 14 மற்றும் 15-ந் தேதிகளில் உதகை ரோஜா பூங்காவில் 18-வது ரோஜா கண்காட்சி நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
குறிப்பாக மே 19, 20, 21, 22, 23 ஆகிய 5 தேதிகளில் பிரத்திபெற்ற 125-வது மலர் கண்காட்சி உதகை தாவரவியல் பூங்காவில் நடைப்பெறுகிறது.
மே 27, 28 ஆகிய தேதிகளில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 63-வது பழக்கண்காட்சியை நடத்தவும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் சிவ சுப்ரமணியம், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.