மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் 24-ம் தேதி வருகிறார். மகா சிவராத்திரி தினமான அன்று 112 அடி உயர ஆதியோகி சிவன் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இந்த சிலையை பிரதமர் திறந்து வைத்து பின்னர் பொதுமக்களிடையே உரையாற்ற உள்ளார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வரும் பிரதமர், விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஈஷா யோக மையம் செல்கிறார்.
பிரதமர் வருகையை ஒட்டி ஆலந்துரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 5 ஆயிரம் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடடுத்தப்பட உள்ளனர். மேலும், வனப்பகுதிகளில் நக்சல் தடுப்பு போலீசார் மற்றும் அதிரடிப்படை போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். மலையடிவாரத்தை சுற்றிலும் ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. திரிபாதி இன்று கோவை வந்தார். தொடர்ந்து, ஈஷா யோகா மையம் என்ற அவர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பிரதமர் வருகையை ஒட்டி ஆலந்துரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 5 ஆயிரம் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடடுத்தப்பட உள்ளனர். மேலும், வனப்பகுதிகளில் நக்சல் தடுப்பு போலீசார் மற்றும் அதிரடிப்படை போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். மலையடிவாரத்தை சுற்றிலும் ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. திரிபாதி இன்று கோவை வந்தார். தொடர்ந்து, ஈஷா யோகா மையம் என்ற அவர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.