கோவை வெள்ளலூரில் லாரி கிளினருக்கு கத்தி குத்து - இருவர் கைது!

கோவை வெள்ளலூரை சேர்ந்த லாரி கிளீனர் கோகுலகிருஷ்ணன் (23) பணம் கேட்டுக் கொடுக்காததால், ஆத்திரமடைந்த சர்புதீன் மற்றும் கிஷோர் ஆகிய இருவரும் கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றனர். இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: மதுகுடிக்க பணம் கொடுக்காததால் லாரி கிளீனரை கத்தியால் குத்திய வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவை வெள்ளலூர் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன் (23). லாரி கிளீனராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று தனது அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் மது போதையில் நடந்து சென்றதாக தெரிகிறது.

அப்போது அதே பகுதியை சேர்ந்த சர்புதீன் (25), கிஷோர் (25), ஆகிய இருவரும் கோகுலகிருஷ்ணனை இடைமறித்து மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்ததாக தெரிகிறது.

ஆனால் கோகுலகிருஷ்ணன் பணம் கொடுக்க மறுத்ததால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சர்புதீன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கோகுலகிருஷ்ணனை குத்தி விட்டு இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இந்நிலையில் அங்கிருந்த கோகுலகிருஷ்ணனின் நண்பர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போத்தனூர் போலீசார், வெள்ளலூர் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த சர்புதீன் மற்றும் கிஷோர் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...