கோவையில் சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் - ஒருவர் கைது, 2 பேர் தப்பியோட்டம்!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் இரவு நேரத்தில் பையில் சந்தனக் கட்டைகளுடன் சுற்றித்திரிந்த கும்பலை போலீசார் துரத்தியதில், சத்தியமங்கலத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவர் கைது செய்யப்பட்டார். தப்பியோடிய 2 பேரை தீவிரமாகத் தேடிவருகின்றனர்.


கோவை: கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலணி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கையில் பையோடு மூன்று பேர் வந்துள்ளனர்.

போலீசார் நிற்பதைப் பார்த்த அவர்கள், அந்தப் பையை வீசிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.

அவர்களை போலீசார் விரட்டியதில், ஒருவர் பிடிப்பட்டார். அந்த நபர் சத்தியமங்கலத்தை சேர்ந்த மாரிமுத்து (வயது32) கூலி தொழிலாளி என்பது விசாரணையில் தெரியவந்தது.

மேலும், அவர்கள் கொண்டு வந்த பையை சோதனை செய்தபோது அதில் சந்தனமரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, மாரிமுத்துவை கைது செய்த போலீசர் 12 சந்தனமரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பிச் சென்ற விஜய், சசிகுமார் ஆகிய இருவரையும் போலீசார் தேடிவருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...