கோவை செல்வபுரம் பை-பாஸ் சாலையில் உள்ள யோக சாஸ்தா குடியிருப்புப் பகுதியில் வாகனங்களின் டயர்கள் அதிக அளவில் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
கோவை: கோவை மாவட்டம் செல்வபுரம் பை-பாஸ் சாலையில் யோகா சாஸ்தா குடியிருப்புப் பகுதி உள்ளது.
இதன் பின்பகுதியில் உள்ள காலியிடத்தில், சைக்கிள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களின் டயர்கள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த டயர்களை பற்றவைத்து, அவற்றிலிருந்து உலோகங்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.

இந்த டயர்களை தீயிட்டு கொளுத்துவதால், சுற்றுப்பகுதி முழுவதும் நச்சுப்புகை பரவுவதாகவும், இதனால், சுவாசப் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு உடல் நலப் பாதிப்புகள் உருவாவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, இந்த டயர் எரிப்புகளால், அப்பகுதி முழுவதும் காற்றுமாசு ஏற்படுவதாக சுட்டிக்காட்டும் அப்பகுதியினர், இப்பிரச்னைக்கு கோவை மாநகராட்சி உடனடி நடவடிக்கை எடுத்து நிர்ந்தரத் தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
இதன் பின்பகுதியில் உள்ள காலியிடத்தில், சைக்கிள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களின் டயர்கள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த டயர்களை பற்றவைத்து, அவற்றிலிருந்து உலோகங்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.
இந்த டயர்களை தீயிட்டு கொளுத்துவதால், சுற்றுப்பகுதி முழுவதும் நச்சுப்புகை பரவுவதாகவும், இதனால், சுவாசப் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு உடல் நலப் பாதிப்புகள் உருவாவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, இந்த டயர் எரிப்புகளால், அப்பகுதி முழுவதும் காற்றுமாசு ஏற்படுவதாக சுட்டிக்காட்டும் அப்பகுதியினர், இப்பிரச்னைக்கு கோவை மாநகராட்சி உடனடி நடவடிக்கை எடுத்து நிர்ந்தரத் தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.