மலைபோல் குவிக்கப்பட்டுள்ள டயர்களால் சுகாதாரசீர்கேடு - கோவை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கோவை செல்வபுரம் பை-பாஸ் சாலையில் உள்ள யோக சாஸ்தா குடியிருப்புப் பகுதியில் வாகனங்களின் டயர்கள் அதிக அளவில் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் செல்வபுரம் பை-பாஸ் சாலையில் யோகா சாஸ்தா குடியிருப்புப் பகுதி உள்ளது.

இதன் பின்பகுதியில் உள்ள காலியிடத்தில், சைக்கிள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களின் டயர்கள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த டயர்களை பற்றவைத்து, அவற்றிலிருந்து உலோகங்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.



இந்த டயர்களை தீயிட்டு கொளுத்துவதால், சுற்றுப்பகுதி முழுவதும் நச்சுப்புகை பரவுவதாகவும், இதனால், சுவாசப் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு உடல் நலப் பாதிப்புகள் உருவாவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.



அதுமட்டுமின்றி, இந்த டயர் எரிப்புகளால், அப்பகுதி முழுவதும் காற்றுமாசு ஏற்படுவதாக சுட்டிக்காட்டும் அப்பகுதியினர், இப்பிரச்னைக்கு கோவை மாநகராட்சி உடனடி நடவடிக்கை எடுத்து நிர்ந்தரத் தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...