பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் குழு!

ஆஸ்கர் விருது பெற்ற தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் ஆவண குறும்படத்தின் இயக்குநர் கார்த்தகி கோன்சால்வெசு மற்றும் தயாரிப்பாளர் குனீத் மோங்கா ஆகியோர், டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.



கோவை: முதுமலையில் யானைகளை பராமரிக்கும் பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதி குறித்து தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் ஆவண குறும்படம் எடுக்கப்பட்டது. இந்த குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் ஆவண குறும்படத்தின் இந்த ஆவணப்படத்தை இயக்கிய கார்த்திகி கான்சால்வேஸ் மற்றும் தயாரித்த குனித் மோங்கா ஆகியோர் விருதை பெற்றுக்கொண்டனர்.

தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் ஆவண குறும்படம், முதுமலை தேசிய பூங்காவில் படமாக்கப்பட்டது. அனாதை யானையான ரகுவின் கதை. இந்த யானையை பொம்மா மற்றும் பெள்ளி என்ற தம்பதி பராமரித்து வந்தனர்.

இந்த ஆவணபடத்தில் யானை மற்றும் தம்பதியிடையேயான உறவு மற்றும் பாசப்பிணைப்பு மட்டும் படமாக்கப்படவில்லை. சுற்றியிருந்த இயற்கைச்சூழலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.



இந்தப் படத்தின் இயக்குநர் கார்த்திகி கோன்சால்வெசு மற்றும் தாயாரிப்பாளர் குனீத் மோங்கா பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

இதற்கு முன்னதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, இருவரும் சந்தித்து வாழ்த்து பெற்றனர். தமிழக அரசு சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதியும் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...