வால்பாறையில் பசுவை அடித்துக் கொன்ற சிறுத்தை - தானியங்கி கேமிராக்கள் பொருத்தி தீவிர கண்காணிப்பு

கோவை மாவட்டம் வால்பாறை அருகே மேய்ச்சலுக்கு சென்ற பசுவை சிறுத்தை அடித்துக்கொன்றது. அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்டறியும் வகையில் தானியங்கி கேமராக்களை பொருத்தி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே வெல்லமலை எஸ்டேட் பகுதியில் சுப்பையா என்பவர் மூன்று பசு மாடுகளை வளர்த்து வந்தார். நேற்று காலை மாடுகளை தேயிலை தோட்டத்தில் மேச்சலுக்கு விட்டுள்ளார்.

மாலை இரண்டு மாடுகள் மட்டும் வீட்டிற்கு வந்தன. ஒரு பசு மாடு வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து சுப்பையா மற்றும் உறவினர்கள், காணாமல் போன மாட்டை தேயிலை தோட்டத்தில் தேடினர். மாடு கிடைக்காததால், இது தொடர்பாக அவர்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த முத்துராஜ் தலைமையிலான வனத்துறையினர், பசு மாட்டை தேடினர்.



அப்போது, காணாமல் மாட்டை சிறுத்தை கொன்று தேயிலை தோட்டத்தில் வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.



இதையடுத்து, இறந்த மாட்டின் உடலை மீட்ட வனத்துறையினர், அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்டறியும் வகையில் தானியங்கி கேமராக்களை பொருத்தி தீவிரமாக கண்காணித்துவருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...