வால்பாறையில் பசுவை அடித்துக் கொன்ற சிறுத்தை - தானியங்கி கேமிராக்கள் பொருத்தி தீவிர கண்காணிப்பு

கோவை மாவட்டம் வால்பாறை அருகே மேய்ச்சலுக்கு சென்ற பசுவை சிறுத்தை அடித்துக்கொன்றது. அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்டறியும் வகையில் தானியங்கி கேமராக்களை பொருத்தி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே வெல்லமலை எஸ்டேட் பகுதியில் சுப்பையா என்பவர் மூன்று பசு மாடுகளை வளர்த்து வந்தார். நேற்று காலை மாடுகளை தேயிலை தோட்டத்தில் மேச்சலுக்கு விட்டுள்ளார்.

மாலை இரண்டு மாடுகள் மட்டும் வீட்டிற்கு வந்தன. ஒரு பசு மாடு வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து சுப்பையா மற்றும் உறவினர்கள், காணாமல் போன மாட்டை தேயிலை தோட்டத்தில் தேடினர். மாடு கிடைக்காததால், இது தொடர்பாக அவர்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த முத்துராஜ் தலைமையிலான வனத்துறையினர், பசு மாட்டை தேடினர்.



அப்போது, காணாமல் மாட்டை சிறுத்தை கொன்று தேயிலை தோட்டத்தில் வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.



இதையடுத்து, இறந்த மாட்டின் உடலை மீட்ட வனத்துறையினர், அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்டறியும் வகையில் தானியங்கி கேமராக்களை பொருத்தி தீவிரமாக கண்காணித்துவருகின்றனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...