கோவையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள ஈஷாவின் ஆதியோகி சிலை திறப்பு விழாவிற்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட புரட்சிகர இளைஞர் கழகத்தினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டம், போளுவாம்பட்டி அருகே மலையடிவாரப் பகுதியில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் 112 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆதியோகி சிலையினை திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற பிப்ரவரி 24-ம் தேதியன்று கோவைக்கு வருகை தரவுள்ளார்.
விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட இந்த சிலையின் திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட சிலை திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புரட்சிகர இளைஞர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வெறும் 100 சதுர அடிக்கு மட்டும் உள்ளூர் பஞ்சாயத்திடம் அனுமதி பெற்றுக்கொண்டு, 4 லட்சம் சதுர அடிக்கு விதிமுறைகளை மீறி ஆதியோகி சிலை அமைக்கப்பட்டுள்ளதாகவும், விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள சிலை திறப்பு விழாவில் பிரதமர் கலந்து கொள்வது சரியான முன்னுதாரனமாக இருக்காது எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புரட்சிகர இளைஞர் கழகத்தைச் சேர்ந்த 13 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கோவை மாவட்டம், போளுவாம்பட்டி அருகே மலையடிவாரப் பகுதியில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் 112 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆதியோகி சிலையினை திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற பிப்ரவரி 24-ம் தேதியன்று கோவைக்கு வருகை தரவுள்ளார்.
விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட இந்த சிலையின் திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட சிலை திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புரட்சிகர இளைஞர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வெறும் 100 சதுர அடிக்கு மட்டும் உள்ளூர் பஞ்சாயத்திடம் அனுமதி பெற்றுக்கொண்டு, 4 லட்சம் சதுர அடிக்கு விதிமுறைகளை மீறி ஆதியோகி சிலை அமைக்கப்பட்டுள்ளதாகவும், விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள சிலை திறப்பு விழாவில் பிரதமர் கலந்து கொள்வது சரியான முன்னுதாரனமாக இருக்காது எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புரட்சிகர இளைஞர் கழகத்தைச் சேர்ந்த 13 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.