கோவையில் ஆம்புலன்சில் பிரசவம் - டிரைவர், மருத்துவ உதவியாளருக்கு குவியும் பாராட்டு!

கோவை சுல்தான்பேட்டையில் பிரசவத்திற்காக அழைத்துச்செல்லப்பட்ட கர்ப்பிணிக்கு 108 ஆம்புலன்சிலேயே பிரசவம் ஆகி அழகான குழந்தை பிறந்தது. துரிதமாக செயல்பட்டு தாய், சேய் உயிரைக் காப்பாற்றிய மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவருக்கு பாராட்டுகள் குவிந்துவருகிறது.


கோவை: கோவை சுல்தான்பேட்டை வாரப்பட்டியைச் சேர்ந்த பிரியா என்ற பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, அவரது கணவர் சிவராஜ் உடனடியாக 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்து, சந்திராபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச்சென்றார்.

இந்நிலையில், ஆம்புலன்ஸ் சூலூர் ராவுத்தர் பிரிவு அருகே சென்றபோது, பிரியாவுக்கு பிரசவ வலி அதிகரித்து குழந்தையின் தலை வெளியே தெரியத் தொடங்கியது. இதையடுத்து, ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் ராஜேஸ்வரி, அவசரகால ஓட்டுநர் தண்டாயுதபாணி உதவியுடன் ஆம்புலன்சில் அப்பெண்ணுக்கு பிரசவம் பார்த்து, தாய் மற்றும் குழந்தையைக் காப்பாற்றினார்.

பின்னர் தாயும், குழந்தையும் சூலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குழந்தை மற்றும் தாயின் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் நலமுடன் இருப்பதாகத் தெரிவித்தனர்.

கர்ப்பிணிப் பெண்ணுக்கு உரிய நேரத்தில் பிரசவம் பார்த்து உயிரைக் காப்பாற்றிய மருத்துவ உதவியாளர் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவருக்கு அங்கிருந்தவர்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...