பல்லடத்தில் பள்ளி வேன் மீது லாரி மோதல் - இரண்டு மாணவிகள் காயம்

பல்லடத்தில் 30-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்ற வேன் மீது சென்னையிலிருந்து குளிர்பானங்களை ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் 2 பள்ளி மாணவிகள் படுகாயமடைந்தனர்.


திருப்பூர்: பல்லடத்தில் பள்ளி வேன் மீது லாரி மோதிய விபத்தில், இரண்டு மாணவிகள் காயமடைந்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 30 மாணவ-மாணவிகள் இன்று பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்றனர்.



வேன் திருச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெருமாள் கோவில் அருகே சென்றபோது சென்னையிலிருந்து குளிர்பானங்களை ஏற்றிக்கொண்டு பல்லடம் நோக்கி வந்த லாரி பள்ளி வேன் மீது கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இதில் வேனில் பயணித்த இரண்டு மாணவிகள் படுகாயமடைந்தனர்.

அருகிலிருந்தவர்கள் காயமடைந்த மாணவிகளை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் காவல்துறையினர் போக்குவரத்து சரிசெய்து விபத்து உண்டான லாரி ஓட்டுநர் ராஜா என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...