பல்லடத்தில் பள்ளி வேன் மீது லாரி மோதல் - இரண்டு மாணவிகள் காயம்

பல்லடத்தில் 30-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்ற வேன் மீது சென்னையிலிருந்து குளிர்பானங்களை ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் 2 பள்ளி மாணவிகள் படுகாயமடைந்தனர்.


திருப்பூர்: பல்லடத்தில் பள்ளி வேன் மீது லாரி மோதிய விபத்தில், இரண்டு மாணவிகள் காயமடைந்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 30 மாணவ-மாணவிகள் இன்று பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்றனர்.



வேன் திருச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெருமாள் கோவில் அருகே சென்றபோது சென்னையிலிருந்து குளிர்பானங்களை ஏற்றிக்கொண்டு பல்லடம் நோக்கி வந்த லாரி பள்ளி வேன் மீது கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இதில் வேனில் பயணித்த இரண்டு மாணவிகள் படுகாயமடைந்தனர்.

அருகிலிருந்தவர்கள் காயமடைந்த மாணவிகளை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் காவல்துறையினர் போக்குவரத்து சரிசெய்து விபத்து உண்டான லாரி ஓட்டுநர் ராஜா என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...