மக்கள் ஏற்காத எந்த திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தாது: கோவையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய பாஜக அரசு மக்கள் மீது திணிக்கவில்லை எனவும், மக்கள் ஏற்காத எந்த திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தாது எனவும் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



கோவை ஈஷா யோக மையத்திற்கு நாளை பிரமர் நரேந்திர மோடி வருகிறார். அவரது வருகயம்யையொட்டி மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று அதிகாலை ரயில் மூலமாக கோவை வந்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:- சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது திமுக செய்த தனது தரப்பு தவறுகளை மறைக்கவே நேற்று உண்ணாவிரத போராட்டத்தை நடத்தியுள்ளது. திமுக, அதிமுக என்ற இரண்டு கழகங்களினாலும் தமிழகத்திற்கு எந்த நன்மையும் வராது. எந்த வழியை கடைபிடித்தாலும் திமுக மீது மக்களுக்கு நம்பிக்கை வரப்போவதில்லை. இந்த இரு கழகங்களையும் ஒழிக்க மக்கள் முடிவு எடுத்து விட்டனர். முதல்வர் தனது பொறுப்பை காப்பாற்ற செலுத்தும் கவனத்தை சுகாதாரம், விவசாயத்தின் மீதும் செலுத்த வேண்டும். வறட்சி, வெள்ளம், பயிர் பாதுகாப்பு உள்ளிட்ட திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு தான் முறைப்படி கேட்டு பெற வேண்டும்.

பல மாதங்களாக தமிழக அரசு செயல்படாத நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு செயல்படுகிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய பாஜக அரசு மக்கள் மீது திணிக்கவில்லை. இத்திட்டம், முந்தைய காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி அரசு கொண்டு வந்த திட்டம். மக்கள் ஏற்காத எந்த திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தாது  ஈஷா யோகா மையத்தின் ஆதியோகி சிலை திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க தற்போது சில எதிர்ப்புகள் வந்தாலும்  அந்த பிரச்சணைக்கு நீதிமன்ற வழக்கு மூலமாக தீர்வு காண வேண்டும். நிகழ்ச்சி நடக்கும் போது மட்டும் பிரச்சணைகளுக்கு உயிரோட்டம் தருவது ஏற்புடையது அல்ல. இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...