பல்லடத்தில் ரூ.200 கோடி மோசடி செய்தவர்கள் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற கோரிக்கை

பல்லடத்தில் பத்திரங்களை அடமானம் வைத்து 200 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்தவர்களை கைது செய்யாமல் காவல்துறை மெத்தனபோக்கோடு செயல்படுவதால் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


திருப்பூர்: ரூ.200 கோடிக்கும் மேல் மோசடி செய்தவர்களை கைது செய்யாமல் காவல்துறை அலட்சியமாக இருப்பதால் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வேலப்பா கவுண்டம்பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மகன்கள் விஜயகுமார் மற்றும் சிவக்குமார். இருவரும் திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த பலரை நூல் வியாபாரத்தில் பங்குதாரராகச் சேர்த்துக் கொள்வதாக கூறி அவர்களின் சொத்து பத்திரங்களை அடமானம் வைத்து ரூ.200 கோடிக்கும் மேல் வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் மூன்று நாட்களுக்கு முன்பு விஜயகுமாரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சிவக்குமார், விஜயகுமார் மற்றும் அவரது மகன் ராகுல் பாலாஜி, பிரவீனா ஆகியோர் தங்களை தொழில் பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக கூறி வீடு, இடம், நில பத்திரங்களை வாங்கி வங்கிகளில் அடமானம் வைத்து ரூ.200 கோடிக்கு மேல் கடன் வாங்கி மோசடி செய்ததாக கூறி பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் ஒரு மாதத்திற்கு பின்பு வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் விசாரணைக்கு ஆஜர்படுத்துமாறு பல்லடம் நீதிமன்றம் ஒரு மாதத்திற்கு முன் பிடிவாரண்ட் பிறப்பித்தும், போலீசார் அவர்களை கைது செய்ய தாமதப்படுத்துவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த குமரேசன் என்பவர் பிரவீனா மீது அளித்திருந்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்து பிரவீனாவை தேடி வந்த பல்லடம் போலீசார் நேற்று பல்லடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது பிரவீனாவை கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி திருப்பூர் மகளிர் சிறையில் அடைத்தனர்.



இந்நிலையில் இன்று பல்லடம் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தாங்கள் தினம், தினம் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் கைது செய்யப்பட்ட பிரவீனா விதவிதமான ஆடைகளில் சினிமா பாடலுக்கு "Facebook reels" போட்டுக்கொண்டு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் காவல்துறையினர் தலைமறைவாக உள்ள மோசடி கும்பலை கைது செய்யாமல் அலட்சியப்படுத்தி வருவதாகவும், மோசடி கும்பலுக்கு காவல்துறை துணை போவதாக சந்தேகம் எழுந்துள்ளதாகவும் கூறினர். எனவே இந்த மோசடி வழக்கினை சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...