கிணத்துக்கடவில் சூறாவளிக்காற்றுடன் பெய்த கனமழை - 15,000 வாழை மரங்கள் சேதம்!

கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு சூறாவளிக் காற்றுடன் பெய்த பலத்த மழையால் 15,000 வாழை மரங்கள் அடியோடு சாய்ந்ததால் வேதனையடைந்த விவசாயிகள், வேளாண் துறையினர் முறையாக கணக்கீடு செய்து உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.


கோவை: கிணத்துக்கடவில் நேற்றைய தினம் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் 15,000 வாழை மரங்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதியில் நேற்றிரவு சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.



இதன் காரணமாக கிணத்துக்கடவு அருகேயுள்ள பொட்டையாண்டிபுறம்பு, கல்லாபுரம், சிங்கையன் புதூர் ஆகிய பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட 15,000 வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து சேதம் அடைந்தன.



தண்ணீர் பற்றாக்குறை இருந்தாலும் சொட்டுநீர் பாசனம் மூலம் வளர்த்து பராமரிக்கப்பட்டு வந்த வாழை மரங்கள் ஒரு மணி நேரம் வீசிய காற்றில் அடியோடு சாய்ந்ததைக் கண்டு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.



இந்நிலையில், வாழைத்தார்கள் இன்னும் இரண்டு மாதங்களில் அறுவடை செய்யும் நேரத்தில் வாழை மரங்கள் சேதம் அடைந்திருப்பது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்திருப்பதாகவும் எனவே வேளாண்மை துறை அதிகாரிகள் முறையாக கணக்கெடுத்து இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...