சூலூர் அருகேயுள்ள குளத்தில் குட்டியம்மாள் என்ற 90 வயது மூதாட்டியின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், விபத்தா, தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே குளத்தில் 90 வயது மூதாட்டியின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூலூர் அருகே குளத்தில் மூதாட்டி ஒருவரது சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் மூதாட்டியின் சடலத்தை மீட்டுள்ளனர்.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், இறந்தவர் ஆதவாணன் தெருவைச் சேர்ந்த குட்டியம்மாள் என்பதும், கணவர் இறந்த நிலையில், அவர் தனியாக வசித்து வந்ததும் தெரியவந்தது.
இதனிடையே இன்று காலை முதல் அந்த மூதாட்டியை காணவில்லை என புகார் எழுந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது சடலம் குளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மூதாட்டியின் மரணம் விபத்தா அல்லது தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூலூர் அருகே குளத்தில் மூதாட்டி ஒருவரது சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் மூதாட்டியின் சடலத்தை மீட்டுள்ளனர்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், இறந்தவர் ஆதவாணன் தெருவைச் சேர்ந்த குட்டியம்மாள் என்பதும், கணவர் இறந்த நிலையில், அவர் தனியாக வசித்து வந்ததும் தெரியவந்தது.
இதனிடையே இன்று காலை முதல் அந்த மூதாட்டியை காணவில்லை என புகார் எழுந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது சடலம் குளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மூதாட்டியின் மரணம் விபத்தா அல்லது தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.