கோவை சூலூர் அருகே குளத்தில் மிதந்த 90 வயது மூதாட்டி சடலம் - போலீசார் விசாரணை!

சூலூர் அருகேயுள்ள குளத்தில் குட்டியம்மாள் என்ற 90 வயது மூதாட்டியின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், விபத்தா, தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே குளத்தில் 90 வயது மூதாட்டியின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூலூர் அருகே குளத்தில் மூதாட்டி ஒருவரது சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் மூதாட்டியின் சடலத்தை மீட்டுள்ளனர்.



தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், இறந்தவர் ஆதவாணன் தெருவைச் சேர்ந்த குட்டியம்மாள் என்பதும், கணவர் இறந்த நிலையில், அவர் தனியாக வசித்து வந்ததும் தெரியவந்தது.

இதனிடையே இன்று காலை முதல் அந்த மூதாட்டியை காணவில்லை என புகார் எழுந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது சடலம் குளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மூதாட்டியின் மரணம் விபத்தா அல்லது தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...