கோவை சூலூர் அருகே குளத்தில் மிதந்த 90 வயது மூதாட்டி சடலம் - போலீசார் விசாரணை!

சூலூர் அருகேயுள்ள குளத்தில் குட்டியம்மாள் என்ற 90 வயது மூதாட்டியின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், விபத்தா, தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே குளத்தில் 90 வயது மூதாட்டியின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூலூர் அருகே குளத்தில் மூதாட்டி ஒருவரது சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் மூதாட்டியின் சடலத்தை மீட்டுள்ளனர்.



தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், இறந்தவர் ஆதவாணன் தெருவைச் சேர்ந்த குட்டியம்மாள் என்பதும், கணவர் இறந்த நிலையில், அவர் தனியாக வசித்து வந்ததும் தெரியவந்தது.

இதனிடையே இன்று காலை முதல் அந்த மூதாட்டியை காணவில்லை என புகார் எழுந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது சடலம் குளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மூதாட்டியின் மரணம் விபத்தா அல்லது தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...