கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மாநகராட்சி ஊழியர் உயிரிழப்பு

கோவை நரசீபுரத்தை சேர்ந்த மாநகராட்சி ஊழியர் சபரிநாதன் (23). கடந்த 3 நாட்களுக்கு பி.கே புதூரில் தனியாக நின்ற போது, மதுபோதையிலிருந்த கிறிஸ்டோபர், வினித் ஆகிய இருவரும் சபரிநாதனை கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


கோவை: கோவை அருகே போதை ஆசாமிகள் கத்தியால் குத்தியதில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாநகராட்சி ஊழியர் சபரிநாதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவை அடுத்த தொண்டாமுத்தூர் நரசீபுரத்தை சேர்ந்தவர் அமிர்தலிங்கம். இவரது மகன் சபரிநாதன் (23). இவர் கோவை மாநகராட்சி தெற்கில் குடிநீர் திறப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் நள்ளிரவு 12.30 மணியளவில் அவர் குனியமுத்தூர் பி.கே புதூரில் உள்ள மதுரை வீரன் கோவில் அருகில் நின்று கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த பி.கே.புதூர் பகுதியை சேர்ந்த கிறிஸ்டோபர், வினித் ஆகிய இரண்டு இளைஞர்கள் மது போதையில் சபரிநாதனை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர். இதில் பலத்த காயமடைந்த சபரிநாதனை உறவினர்கள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பதுங்கியிருந்த கிருஸ்டோபர் மற்றும் வினீத்தை போலீசார் கைது செய்து அவர்கள் மீது கொலை முயற்சி வழக்காக பதிவு செய்தனர்.

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சபரிநாதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

Newsletter

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...