உடுமலையில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் - ராகுல்காந்தியின் பதவி பறிப்புக்கு கண்டனம்!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பைக் கண்டித்து உடுமலையில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை ரயில் நிலையம் முன்பு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ராகுல் காந்தியின் எம்.பி பதவியை பறித்த மத்திய மோடி அரசை கண்டித்து இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அநீதியானது என்றும், அதனை காரணம்காட்டி ராகுல்காந்தியை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்துள்ள ஒன்றிய அரசின் சர்வாதிகார நடவடிக்கையை கண்டித்தும் போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.



இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினரும், நலவாரியம் மாவட்ட செயலாளருமான குணசேகரன், மாவட்டத் துணைச் செயலாளர் அப்பாஸ், தமிழர் பண்பாட்டு பேரவை இணைத்தலைவர் பால் நாராயணன், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மாநில பொதுக்குழு உறுப்பினர் கோவிந்தராஜு,

மாவட்ட கவுன்சிலர் ஜனார்த்தனன், உடுமலை நகரத் தலைவர் கோ.ரவி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சதீஷ் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...