பொள்ளாச்சியில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் - ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

குருத்தோலை ஞாயிறு தினத்தையொட்டி, பொள்ளாச்சியில் உள்ள புனித லூர்து அன்னை ஆலயம் மற்றும் இந்திரா நகர் கிறிஸ்துவ ஆலய பங்குத்தந்தை ரெவரன்ட் பாதர் ஜேக்கப் தலைமையில், புனித லூர்து அன்னை ஆங்கில பள்ளி முதல் புனித லூர்து அன்னை ஆலயம் வரை ஊர்வலமாக சென்றனர்.


கோவை: பொள்ளாச்சியில் நடைபெற்ற குருத்தோலை ஊர்வலத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு ஒசானா பாடலை பாடியபடி ஊர்வலமாக சென்றனர்.



கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள புனித லூர்து அன்னை ஆலயம் மற்றும் இந்திரா நகர் கிறிஸ்துவ ஆலய பங்குத்தந்தை ரெவரன்ட் பாதர் ஜேக்கப் தலைமையில், புனித லூர்து அன்னை ஆங்கில பள்ளி வளாகத்திலிருந்து புனித லூர்து அன்னை ஆலயம் வரை கிறிஸ்துவ மக்கள் தங்களது கைகளில் குருத்தோலைகளை ஏந்தி பாடல்களை பாடி ஊர்வலமாக ஆலயத்திற்குள் சென்றனர்.



தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஒவ்வொருவரும் தவ முயற்சிகளையும் உபவாசமும் மேற்கொண்டனர்.

இந்த வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படுவதால் புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை வரை சிறப்பு ஆராதனை வழிபாடுகள் நடைபெற உள்ளது என ஆலய பங்குத்தந்தை தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...