கோவை தனியார் மருத்துவமனை மாடியிலிருந்து குதித்து நோயாளி தற்கொலை - போலீசார் விசாரணை!

கோவையில் சித்ரா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் விபத்துக்காக சிகிச்சை பெற்றுவந்த சேலம் மாவட்டம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த புகழ்ராஜா என்பவர் இன்று அதிகாலை மருத்துவமனையின் 5ஆவது மடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.


கோவை: சேலம் மாவட்டம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் புகழ்ராஜா (வயது37). கடந்த மார்ச் 19 ஆம் தேதி விபத்தில் சிக்கிய அவர், மேல் சிகிச்சைக்காக கோவை சித்ரா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கடந்த 4 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த புகழ்ராஜா, சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த 5ஆவது மாடியில் இருந்து ஜன்னல் வழியே கீழே குதித்தார்.

இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், அவருக்கு ஏற்பட்ட விபத்தில் மன ரீதியாகவும் புகழ்ராஜா பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதற்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து கண்காணித்து வந்தததும் தெரியவந்துள்ளது.

மேலும், புகழ்ராஜாவை கவனித்துக்கொள்ள அவரது உறவினர்களும் அறையில் இருந்த நிலையில், அதிகாலையில் அனைவரும் அசந்த நேரத்தில் ஜன்னல் வழியாக குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...