மேட்டுப்பாளையம் அருகே 13 வயது சிறுமியை கடத்திய வாலிபர் கைது

மேட்டுப்பாளையத்தில் ஆசை வார்த்தை கூறி 13வயது சிறுமியை சென்னைக்கு கடத்தி சென்ற கேரளாவைச் சேர்ந்த பீரவின் என்பவரை, சிறுமியின் உறவினர்கள் பிடித்து தாக்கினர். இதையறிந்த போலீசார் வாலிபரை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: மேட்டுப்பாளையத்தில் 13வயது சிறுமியை கடத்திய கேரள வாலிபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள மண்ணுத்தியை சேர்ந்தவர் பிரவீன் (28). இவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள புகை பரிசோதனை நிலையத்தில் கடந்த ஒரு வாரமாக வேலை பார்த்து வந்தார். அப்போது பிரவீனுக்கு அருகே ஜூஸ் கடை வைத்து நடத்தி வரும் உரிமையாளரின் மகளான 13 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது.

பின்னர் இது காதலாக மாறியது.நேற்று மாணவியை பிரவீன், சென்னைக்கு செல்லலாம் என ஆசை வார்த்தை கூறி ஆட்டோவில் கடத்தி சென்றுள்ளார். இதையறிந்த மாணவியின் உறவினர்கள் ஆட்டோவை பின் தொடர்ந்து சென்று, மதினா நகர் அருகே ஆட்டோவை நிறுத்தி மாணவியை மீட்டனர்.

பின்னர் வாலிபருக்கு தர்ம அடி கொடுத்தனர். தகவலறிந்து வந்த மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரவீனை மீட்டனர். பின்னர் அவரை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...