காதலனுடன் சென்ற மகளை மீட்டு கொடுங்கள்..! - முன்னாள் ராணுவ வீரர் சாலையில் படுத்து போராட்டம்!

துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு முன்னாள் ராணுவ வீரர் ஒருவர், காதலனுடன் சென்ற மகளை மீட்டுத்தர கோரி, கோவை - மேட்டுப்பாளையம் சாலையை நடுவே படுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



கோவை: துடியலூர் அருகே காதலனுடன் சென்ற மகளை மீட்டுத்தர கோரி, மகளிர் காவல் நிலையம் முன்பு சாலையில் படுத்து முன்னாள் ராணுவ வீரர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை மாவட்டம் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு முன்னாள் ராணுவ வீரர் கோவை - மேட்டுப்பாளையம் சாலையை மறித்து எனக்கு நியாயம் வேண்டும் என்று கூறி படுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீசார் அவரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து அவரிடம் பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி நமச்சிவாயம் விசாரணை நடத்தினார்.



விசாரணையில் அவர், கோவை தொப்பம்பட்டி அருணாநகர் பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பதும், ராணுவத்தில் பணியாற்றிவிட்டு கடந்த 2014ஆம் ஆண்டு திரும்பியவர் என்பதும் தெரியவந்தது.

மேலும் அவரது மகள், வீட்டின் அருகிலுள்ள வாலிபரை கடந்த 4 வருடமாக காதலித்து வந்துள்ளார் என்பதும், தற்போது மகள் காதலனுடன் இருப்பதாகவும் தெரியவந்தது. இதனை கேட்க சென்ற தன்னை அடித்து விட்டதாகவும், தனது மகளை மீட்டுத்தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

திடீரென சாலையை மறித்து ஒருவர் படுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...