கோவை ஆலாந்துறையில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி!

கோவை மாவட்டம் ஆலாந்துறை பேரூராட்சி மற்றும் பிச்சனூர் ஊராட்சியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு 416 பயனாளிகளுக்கு ரூ.5.39கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


கோவை: ஆலாந்துறை பேரூராட்சி மற்றும் பிச்சனூர் ஊராட்சியில் முடிவுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

கோயம்புத்தூர் மாவட்டம், ஆலாந்துறை பேரூராட்சி வளாகத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு, 416 பயனாளிகளுக்கு ரூ.5.39 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



பின்னர் இதைத் தொடர்ந்து ரூ.2.36 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைத்தும், ரூ.4.17 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) அலர்மேல்மங்கை, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) துவாரகநாத் சிங்,

ஆலாந்துறை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ராமமூர்த்தி, பேரூராட்சி துணைத்தலைவர் மூர்த்தி, தொண்டாமுத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரி உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...