பல்லடத்தில் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் நிறுத்தம்! - பரபரப்பு

பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் நடத்துவது குறித்து கடும் வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து இளம் வழக்கறிஞர்கள் வெளிநடப்பு செய்ததால் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி நடைபெற இருந்த சங்க தேர்தல் நிறுத்தப்பட்டது.


திருப்பூர்: பல்லடத்தில் நடைபெற்ற வழக்கறிஞர்கள் சங்க கூட்டத்தில் தேர்தல் நடத்துவது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் வழக்கறிஞர்கள் சங்கத்திற்கான தேர்தல் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் 2021 ஆம் ஆண்டு வரை உறுப்பினர்களாக உள்ள 84 வழக்கறிஞர்கள் மட்டுமே வாக்களிக்க வேண்டும் எனவும் 2023 ஆம் ஆண்டு மார்ச் 31 வரை புதிதாக சேர்ந்த இளம் வழக்கறிஞர்கள் வாக்களிக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.



இதன் காரணமாக, மூத்த வழக்கறிஞர் மகேஷ் என்பவர் தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்ததால் இன்று ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பல்லடம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மார்ச் 31 2023 ஆம் ஆண்டு வரை உறுப்பினர்களாக சேர்ந்த இளம் வழக்கறிஞர்களையும் சேர்த்து தேர்தல் நடத்துவதற்கு ஆதரவு கோரப்பட்டது.



பெருவாரியான வழக்கறிஞர்கள் இதற்கு ஆதரவளித்த நிலையில் சில வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



ஆலோசனைக் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் வழக்கறிஞர்கள் சிலர் பாதியிலேயே கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் பேசுகையில், கடந்த ஒன்றரை வருடங்களாக சங்கத்தில் பைலாவை யாரும் பின்பற்றவில்லை. இளம் வழக்கறிஞர்களுக்கு வாய்ப்பளிக்காததால் பெரும் ஏமாற்றத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் இன்று நடைபெற்ற கூட்டத்தில் எந்த முடிவுகளும் எட்டப்படாமல் கூட்டம் முடிவடைந்தது. மேலும் ஏப்ரல் 27ஆம் தேதி நடைபெற இருந்த வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, என்றார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...