உடுமலை அரசு மேல்நிலை பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதாகிய நிலையில், 6 மாதமாக சீரமைக்கப்படாமல் பாழாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திருப்பூர்: உடுமலை அரசு மேல்நிலை பள்ளியில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் சீரமைக்கப்படாமல் பாழாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை ராஜேந்திரா சாலை அரசு மேல்நிலை பள்ளியில் மாணவ - மாணவிகளுக்கு சுகாதாரமான, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் நவீன சுத்திகரிப்பு இயந்திரம் நிறுவ திட்டமிடப்பட்டது. இதற்கென சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2021-22 மூலம் ரூ.5 லட்சம் செலவில் நவீன குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் நிறுவப்பட்டது.
இந்த இயந்திரம் நிறுவப்பட்டு ஒரு சில மாதங்கள் கூட செயல்படாத நிலையில் திடீரென பழுதடைந்தது. கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக இந்த இயந்திரமானது, செயல்படாத நிலையில் சுத்திகரிப்பு இயந்திரம் வீணாகி வருகிறது.
இதனால், மாணவ-மாணவிகளுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை பழுது நீக்கி பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை ராஜேந்திரா சாலை அரசு மேல்நிலை பள்ளியில் மாணவ - மாணவிகளுக்கு சுகாதாரமான, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் நவீன சுத்திகரிப்பு இயந்திரம் நிறுவ திட்டமிடப்பட்டது. இதற்கென சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2021-22 மூலம் ரூ.5 லட்சம் செலவில் நவீன குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் நிறுவப்பட்டது.
இந்த இயந்திரம் நிறுவப்பட்டு ஒரு சில மாதங்கள் கூட செயல்படாத நிலையில் திடீரென பழுதடைந்தது. கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக இந்த இயந்திரமானது, செயல்படாத நிலையில் சுத்திகரிப்பு இயந்திரம் வீணாகி வருகிறது.
இதனால், மாணவ-மாணவிகளுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை பழுது நீக்கி பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.