உடுமலை ரயில் நிலையத்தில் கூடுதல் பார்க்கி்ங் கட்டணம் வசூல் - பயணிகள் புகார்

உடுமலை ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடத்தில், அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை ரயில் நிலையத்தில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ரயில் நிலையத்தை தினசரி ஏராளமான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். பைக் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வரும் பயணிகள் வாகனங்களை பாதையை மறித்து நிறுத்துவதால், செல்வதற்கு இடமில்லாமல் பயணிகள் தவித்து வந்தனர்.

இந்நிலையில் வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும் என்ற பயணிகளின் கோரிக்கையை ஏற்று உடுமலை ரயில் நிலையத்தில் வாகன நிறுத்துமிடம் திறக்கப்பட்டது. ஆனால் அங்கு போதிய அடிப்படை வசதிகள் செய்யப்படாமல், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து பயணிகள் கூறியதாவது, ரயில் நிலையத்தில் பைக்குகளை நிறுத்துவதற்கு கட்டணமாக 12 மணி நேரத்துக்கு ரூ.15-ம், 24 மணி நேரத்துக்கு ரூ.20-ம் வசூலிக்கின்றனர். ஆனால் சில மணி நேரங்கள் மட்டுமே நிறுத்தி விட்டு சென்றாலும் ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது குறித்து கேட்டால் முறையாகப் பதில் அளிப்பதில்லை. எனவே கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...