கோவை அருகே கார் கவிழ்ந்து விபத்து - 5 மாத பெண் குழந்தை பலி, 7 பேர் காயம்!

ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியை சேர்ந்த நவீன், தனது 5 மாத பெண் குழந்தைக்கு உணவு ஊட்டும் நிகழ்ச்சிக்காக குருவாயூர் கோவிலுக்கு சென்று காரில் திரும்பிக் கொண்டிருந்தார். கோவை மதுக்கரை நெடுஞ்சாலையில் கார் விபத்தில் சிக்கி 5 மாத குழந்தை உயிரிழந்தது. காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


கோவை: மதுக்கரை அருகே கார் விபத்துக்குள்ளானதில் 5 மாத பெண் குழந்தை உயிரிழந்தது. மேலும் 7 பேர் காயமடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியை நவீன், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி காயத்ரி. இவர்களது 5 மாத குழந்தையான பிரதிக்‌ஷாவிற்கு உணவு ஊட்டும் நிகழ்ச்சிக்காக, நவீன் மற்றும் காயத்ரி வீட்டார் என குடும்பத்துடன் கேரளா மாநிலம் குருவாயூர் கோவிலுக்கு காரில் சென்றனர். பின்னர் மீண்டும் கோவை வழியாக ஈரோடு நோக்கிச் சென்றனர்.

அப்போது கார் கோவை மதுக்கரை நெடுஞ்சாலை போடிபாளையம் அருகே வந்து கொண்டிருந்தபோது, முன் இருக்கையில் இருந்த நவீன், தலையனையை பின்னால் எடுத்து கொடுத்தாக தெரிகிறது.



இதனால், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரத்தில் இருந்த தடுப்புக்கல் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், காரின் முன் இருக்கையில் காயத்ரியிடம் இருந்த 5 மாத குழந்தை பிரதிக்‌ஷா காரில் இருந்து வெளியே விழுந்ததில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இந்த விபத்தில், நவீன், காயத்ரி உள்ளிட்ட 7 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.



சம்பவ இடத்திற்கு வந்த மதுக்கரை போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நவீன் உள்ளிட்டோரையும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து பொக்லைன் இயந்திரம் மூலம் கார் அகற்றப்பட்டது. இந்த விபத்து குறித்து மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...