கோவை பூச்சியூர் பண்ணாரியம்மன் கோவில் பூக்குண்ட உற்சவ விழா

கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தை அடுத்த பூச்சியூர் பகுதியில் உள்ள சஞ்சீவி பண்ணாரி மாரியம்மன் கோவிலின் 50ம் ஆண்டு பூக்குண்ட உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


கோவை: கோவை நரசிம்மநாயக்கன் பாளையம் அருகேயுள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலின் 50ம் ஆண்டு பூக்குண்ட உற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

கோவை நரசிம்ம நாயக்கன்பாளையத்தை அடுத்த பூச்சியூர் இராவுத்தக்கொல்லனூரில் சஞ்சீவி பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் 50ம் ஆண்டு பூக்குண்ட உற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

பூக்குண்ட உற்சவத்தின் முதல் நிகழ்வாக கடந்த 27ம் தேதி கணபதி ஹோமம் மற்றும் பூச்சாட்டுதல், கம்பம் நடுதல் நிகழ்வுடன் தொடங்கி நேற்று சஞ்சீவி வனத்தீர்த்தம் கொண்டுவருதல், சக்தி அழைத்தல், குண்டம் திறப்பது, அக்னி குண்டத்தில் அக்னி ஏற்படுத்துதல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றது.



தொடர்ந்து இன்று காலை சக்தி கரம் அழைத்தலை தொடர்ந்து பூக்குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பூக்குண்டம் இறங்கினர். தொடர்ந்து பூவோடு எடுத்தல், அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜைகளும் நடைபெற்றன.



இந்த திருவிழாவில், சுற்று வட்டாரங்களில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...