உடுமலை அருகே ஸ்வீட் கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 13.75 சவரன் நகை கொள்ளை!

உடுமலை அருகே பட்டப்பகலில் ஸ்வீட் கடை உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து வீட்டில் இருந்த 13.75 சவரன் நகைகள் கொள்ளைய அடிக்கப்பட்ட சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர்: உடுமலை அருகே பட்டப்பகலில் ஸ்வீட் கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 13.75 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த சின்ன வீரம்பட்டி செல்லாண்டியம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் தரணி(36). இவரது கணவர் பாலசுப்பிரமணியம். இருவரும் மலையாண்டி கவுண்டனூரில் ஸ்வீட் கடை ஒன்றை நடத்தி வருகின்றனர்.



இதனிடையே வழக்கம் போல் இருவரும் இன்று கடைக்கு சென்ற நிலையில், தரணி மட்டும் வீட்டுக்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டினுள், பீரோவில் இருந்த 13.75 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து தரணி, உடுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் பொதுமக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...