பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் இந்திய ரயில்வேயினால் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வரும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் துப்புறவுப் பணிகளின் ஒரு பகுதியாக இன்று (23.02.2017) சேலம் ரயில்நிலையத்தில் சிறப்பு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

நிரங்காரி பாபா ஹர்தேவ் சிங் அவர்களின் 63-வது பிறந்த நாள் நினைவை ஒட்டி நடைபெற்ற இந்த சிறப்பு தூய்மைப் பணிகளில், சந்த் நிரங்காரி அறக்கட்டளையின் 45 தன்னார்வத் தொண்டர்கள் ரயில்வே ஊழியர்களுடன் கலந்து கொண்டு தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.

சேலம் கோட்ட உதவி வணிக மேலாளர் எம். ஷாஜஹான் மற்றும் உதவி சுகாதார அலுவலர் எஸ்.குமார் ஆகியோர் இந்நிகழ்விற்கு தலைமை வகித்தனர்.

இந்திய ரயில்வேயில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணிகளில் சந்த் நிரங்காரி அறக்கட்டளையின் பங்களிப்பை பாராட்டிய சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரி சங்கர் வர்மா, சேலம் கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் இத்தகு சிறப்பு தூய்மைப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.


நிரங்காரி பாபா ஹர்தேவ் சிங் அவர்களின் 63-வது பிறந்த நாள் நினைவை ஒட்டி நடைபெற்ற இந்த சிறப்பு தூய்மைப் பணிகளில், சந்த் நிரங்காரி அறக்கட்டளையின் 45 தன்னார்வத் தொண்டர்கள் ரயில்வே ஊழியர்களுடன் கலந்து கொண்டு தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.

சேலம் கோட்ட உதவி வணிக மேலாளர் எம். ஷாஜஹான் மற்றும் உதவி சுகாதார அலுவலர் எஸ்.குமார் ஆகியோர் இந்நிகழ்விற்கு தலைமை வகித்தனர்.

இந்திய ரயில்வேயில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணிகளில் சந்த் நிரங்காரி அறக்கட்டளையின் பங்களிப்பை பாராட்டிய சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரி சங்கர் வர்மா, சேலம் கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் இத்தகு சிறப்பு தூய்மைப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
