பொள்ளாச்சி மாரியம்மன் கோயில் திருவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, சிவப்பு நிற பட்டுடுத்தி வெள்ளி தேரில் உலாவவந்த அம்மனை ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்தனர்.



கோவை: பொள்ளாச்சி வாழ் மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வரும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் தேர் திருவிழா, கடந்த பங்குனி மாதம் முதல் செவ்வாய் கிழமை நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து, பக்தர்கள் பூவோடு எடுத்தும், அலகு குத்தியும் தங்களது நேர்த்தி கடனை செலுத்தி வந்தனர். நேற்று காலை மாவிளக்கு எடுத்து அம்மனை வழிபட்டனர்.



திருவிழாவின் முக்கிய நிகழ்வான மாரியம்மன் வெள்ளி தேரில் திருவீதி உலா நேற்றிரவு நடைபெற்றது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித் தேரில் சிவப்பு நிற பட்டுடுத்தி அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.



இதனை ஆயிரக்கணக்கான மக்கள் பக்தியுடன் தரிசனம் செய்தனர். அதர்மத்தை நீக்கி தர்மத்தை நிலை நாட்ட மாரியம்மன் சிவப்பு நிற பட்டுடுத்தி உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் சுபிட்சத்தை அருளவும், அம்மன் கருணையால் மக்கள் எல்லா வளங்களும் பெறவேண்டியும் இந்த திருவீதி உலா நடைபெறுவதாக அர்ச்சகர் தியாகராஜன் தெரிவித்தார்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...