தாராபுரம் காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்!

தாராபுரம் வட்டத்துக்குட்பட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 86 பைக்குகள், திருப்பூர் மாவட்ட எஸ்பி சிசாங் சாய் உத்தரவின் பேரில், தாராபுரம் வட்டாட்சியர் ஜெகஜோதி முன்னிலையில், ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 50 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.


திருப்பூர்: தாராபுரம் தாலுகாவுக்குட்பட்ட காவல் நிலையங்களில் பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகள் இன்று ஏலம் விடப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டத்துக்குட்பட்ட தாராபுரம், மூலனூர், அலங்கியம் மற்றும் குண்டடம் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையதாக 86 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு அந்தந்த காவல் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்த பைக்குகளுக்கு யாரும் உரிமை கோராததால், திருப்பூர் மாவட்ட எஸ்பி சிசாங் சாய் உத்தரவின் பெயரில், தாராபுரம் வட்டாட்சியர் ஜெகஜோதி முன்னிலையிலும், தாராபுரம் டிஎஸ்பி தனராசு, காவல் ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் மேற்பார்வையிலும், தாராபுரம் காவல் நிலையத்தில் வைத்து பகிரங்க ஏலம் நடைபெற்றது.

இந்த ஏலத்தில் 86 வாகனங்களும் ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 50 ரூபாய்க்கு ஏலம் போனது. இந்த ஏலத்தில் திருப்பூர்,கோவை,மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான மொத்த விற்பனையாளர்கள் மற்றும் தாராபுரம் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து பொதுமக்கள் ஏலத்தில் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...