சாலையோர காய்கறி கடைகளை அகற்றுங்கள்..! - தாராபுரத்தில் உழவர் சந்தை விவசாயிகள் புகார்

தாராபுரத்தில் உழவர் சந்தை அருகில் செயல்பட்டுவரும் சாலையோரக் கடைகளால் உழவர் சந்தைக்கு விவசாயிகள் கொண்டுவரும் காய்கறிகள் விற்க முடியாமல், அந்த காய்கறிகளை தரகர்களிடமே விற்க வேண்டிய அவலநிலை நிலவிவருவதாக தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகி கோபாலகிருஷ்ணன், தாராபுரம் நகராட்சியில் மனு ஒன்று அளித்தார்.

அதில், தாராபுரம் உழவர் சந்தைக்கு வரும் வெளியில் உள்ள அனைத்து சாலைகளில் ஓரமாக சட்டவிரோதமாக காய்கறி கடைகளை உழவர் சந்தை நடக்கும் நேரத்தில் நடத்தி உழவர்களின் வாழ்வாதாரத்தை பறித்துவருகிறார்கள்.



இதுகுறித்து பலமுறை தாராபுரம் நகராட்சி ஆணையர் தாராபுரம் வட்டாட்சியர் கோட்டாட்சியரிடம் கவனயீர்ப்பு செய்து மனு கொடுத்தும் நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படாமலே இந்த பிரச்சனை நீடித்துக் கொண்டிருக்கிறது.



உழவர் சந்தைக்கு உழவர்கள் கொண்டுவரும் காய்கறிகள் விற்க இயலாமல், அவர்கள் மீண்டும் இதை தரகர்களிடமே விற்க வேண்டிய அவலநிலை நிலவிவருகிறது.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக, தமிழ்நாடு அரசு நகராட்சியில் நிர்வாகம் இயக்குனரகம் கடந்த 26/9/2022 அன்று சுற்றறிக்கை எண் 48 45 2022- இன் படி தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சி நகராட்சி, பேரூராட்சிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உழவர் சந்தை அருகே சட்டவிரோதமாக சாலையோர காய்கறி கடைகளை அனுமதிக்கவே கூடாது என உத்தரவிட்டது.

எனவே, அந்த சுற்றறிக்கை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்து உழவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...