கோத்தகிரியில் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை உலா - பொதுமக்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில் அடிக்கடி உலா வரும் வனவிலங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்ற அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


நீலகிரி: கோத்தகிரியில் இருந்து அரவேணு செல்லும் சாலையில் உள்ள பெரியார் நகர் பகுதியில் அடிக்கடி சிறுத்தை கரடி நடமாட்டம் இருந்து வருகிறது.

இதனிடையே நேற்று நள்ளிரவு சிறுத்தை ஒன்று உலா வந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி, அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

அடிக்கடி உலாவரும் கரடி, சிறுத்தை போன்ற வனவிலங்குகளால் கிராம மக்கள், வெளியே செல்ல இயலாமல் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு கருஞ்சிறுத்தைகள், இரண்டு சிறுத்தைகள், மூன்று கரடிகள் இதே பகுதியில் உலா வந்தன.



தற்போது சிறுத்தை நடமாடி வந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

குடியிருப்பு பகுதியில் அடிக்கடி உலா வரும் வனவிலங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்ற அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...