வால்பாறை சுப்பிரமணியசாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா - காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!

வால்பாறையில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 71வது ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பால் காவடி, பறவை காவடி மற்றும் அலகு குத்தி நேர்த்திக்கடனை செலுத்தினர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகேயுள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

வால்பாறை பகுதியில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 71வது ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. மூன்றாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய இந்த திருவிழாவின் இறுதி நாளான இன்று சுப்பிரமணியசாமி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



மேலும் நல்லகாத்து பாலம் பகுதியில் இருந்து 10 க்கும் மேற்பட்ட ஆதிவாசி பழங்குடி கிராம மக்கள் சார்பாக பக்தர்கள் 131 பால்குட தீர்த்தம் சுமந்து ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்தனர்.



குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அலகு குத்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.



மேலும் ஏராளமான பக்தர்கள், புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பால் காவடி மற்றும் பறவை காவடி சுமந்துகொண்டு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வரை ஊர்வலமாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.



இந்த நிகழ்வில், சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...