உடுமலையில் தலைக்கவசம் அணிவது குறித்து பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு!

பள்ளி கல்வித்துறை உத்தரவின் பேரில் உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் பள்ளி வளாகம் முன்பு மாணவிகள் சாலை பாதுகாப்பு, தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

மாணவர்களின் பெற்றோருக்கு, சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன் அடிப்படையில், உடுமலையில் உள்ள பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில், 6 முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவியர் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.



இந்த நிகழ்வில் மாணவியர், சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த சின்னங்கள் அடங்கிய பலகையை வைத்துக்கொண்டு, பள்ளியின் முன்பு வாகன ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



மேலும், தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம், இருசக்கர வாகனங்களில் பள்ளி மாணவர்கள் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும், சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்று வது, இரண்டு சக்கர வாகனங்களில் அதிக நபர்கள் பயணம் செய்வதை தவிர்ப்பது, மிதமான வேகத்தில் வாகனம் ஓட்டுவது குறித்து, வாகன ஓட்டுனர்களிடம் எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியை பள்ளியின் ஆசிரியை விஜயலட்சுமி ஒருங்கிணைத்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...