உடுமலையில் தலைக்கவசம் அணிவது குறித்து பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு!

பள்ளி கல்வித்துறை உத்தரவின் பேரில் உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் பள்ளி வளாகம் முன்பு மாணவிகள் சாலை பாதுகாப்பு, தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

மாணவர்களின் பெற்றோருக்கு, சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன் அடிப்படையில், உடுமலையில் உள்ள பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில், 6 முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவியர் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.



இந்த நிகழ்வில் மாணவியர், சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த சின்னங்கள் அடங்கிய பலகையை வைத்துக்கொண்டு, பள்ளியின் முன்பு வாகன ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



மேலும், தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம், இருசக்கர வாகனங்களில் பள்ளி மாணவர்கள் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும், சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்று வது, இரண்டு சக்கர வாகனங்களில் அதிக நபர்கள் பயணம் செய்வதை தவிர்ப்பது, மிதமான வேகத்தில் வாகனம் ஓட்டுவது குறித்து, வாகன ஓட்டுனர்களிடம் எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியை பள்ளியின் ஆசிரியை விஜயலட்சுமி ஒருங்கிணைத்தார்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...