கோவை அருகே பைக் மீது கல்லூரி பேருந்து மோதி விபத்து - தந்தை, மகன் பலியான சோகம்!

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே தனியார் கல்லூரி மாணவர்களை ஏற்றிச் சென்ற கல்லூரி பேருந்து, சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது மோதியதில், தந்தை, மகன் பலியான சம்பவம் குறித்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தின் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் தந்தையும் மகனும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருமத்தம்பட்டி அடுத்த நார்த்தங்காடு பகுதியை சேர்ந்தவர் தங்கவேலு. இவர் தனது மகன் நந்தகுமாருடன் அதிகாலை கோவிலுக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.



இருசக்கர வாகனம் கிட்டாம்பாளையம் நான்கு ரோடு அருகே சென்றபோது, பொள்ளாச்சியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் கல்லூரி பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது திடீரென மோதி விபத்துக்குள்ளானது.



இந்த விபத்தில் தந்தையும், மகனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இருவரது சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து, தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநர் செல்வத்தை கைது செய்து கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில் பொள்ளாச்சியை சேர்ந்த தனியார் பாலிடெக்னிக் மாணவர்களை, சத்தியமங்கலம் தனியார் கல்லூரியில் நடைபெறும் கேம்பஸ் இன்டர்வியூவில் கலந்து கொள்ள வைப்பதற்காக கல்லூரி பேருந்தில் அழைத்து சென்ற போது விபத்து ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.

இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தந்தையும், மகனும் இரு சக்கர வாகனத்தில் சாலையைக் கடக்கும் போது பேருந்து மோதும் பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை உள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...