தாராபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்!

தாராபுரம் நகர் மன்ற தலைவர் பாப்பு கண்ணன் தலைமையில் அதிகாரிகள், மத்திய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளுடன், கடை உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கடைகளை அகற்றும் பணியின் போது கடை உரிமையாளர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தாராபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வணிக கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு, டீக்கடை, பழக்கடை, செருப்பு கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் இயங்கி வருகின்றன.

தாராபுரம் மத்திய பேருந்து நிலையத்திற்கு தினசரி சுமார் 10,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். தற்போது கோடை காலம் என்பதால் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் உட்காருவதற்கு கூட இடமில்லாமல் ஆங்காங்கே கடும் வெயிலிலும் நின்றபடியே பேருந்துக்காக காத்திருக்கும் சூழல் இருந்து வருகிறது.

இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கடை உரிமையாளர்களுக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்தனர்.



அதன் அடிப்படையில் இன்று அதிரடியாக தாராபுரம் நகர மன்ற தலைவர் பொறியாளர் பாப்பு கண்ணன் தலைமையில், நகராட்சி ஆணையாளர் ராமர் முன்னிலையில், தாராபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தினர்.



அப்போது அங்கு ஒரு சில கடை உரிமையாளர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...