வால்பாறை - பொள்ளாச்சி சாலையை மறித்த யானைகளால் பரபரப்பு

வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் உள்ள புதுதோட்டம் எஸ்டேட் பகுதியில் வனப்பகுதியிலிருந்து மூன்று காட்டு யானைகள் தண்ணீர் தேடி சாலையை கடந்து சென்றது. அப்போது அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சாலையில் நின்ற யானைகளை பார்த்து பயந்து வாகனங்களை நிறுத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


கோவை: வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் மூன்று காட்டு யானைகள் சாலையை மறித்து நின்றதால் வாகன ஓட்டிகள் பயந்து வாகனங்களை நடுவழியிலேயே நிறுத்தினர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் வனப்பகுதியிலிருந்து வெளியேறி தேயிலை தோட்டங்களிலும், வனப்பகுதி சாலை ஓரங்களிலும் சுற்றி வருகிறது.



தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைந்து காணப்படுகிறது. மேலும் வனப்பகுதிக்குள் தண்ணீர் இல்லாததால் வனவிலங்குகள், தண்ணீர் தேடி அங்கும் இங்கும் அலைந்து திரிகிறது.

இந்நிலையில் வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் உள்ள புது தோட்டம் எஸ்டேட் பகுதியில் வனப்பகுதியிலிருந்து மூன்று காட்டு யானைகள் தண்ணீர் தேடி சாலையை கடந்து சென்றது. அப்போது அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சாலையில் நின்ற யானைகளை பார்த்து பயந்து வாகனங்களை நிறுத்தினர்.



சிறிது நேரம் கழித்து காட்டு யானைகள் சாலையை கடந்து தண்ணீர் இருக்கும் இடத்திற்கு சென்று தண்ணீர் குடித்து நின்றது. இதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். பின்பு காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் சென்றது.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...