உடுமலை அருகே அமராவதி ஆற்றில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம் மிடாப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (36). இவர் நண்பர்களுடன் மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றில் குளித்த போது, நீரில் மூழ்கி உயிரிழந்தார். சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


திருப்பூர்: உடுமலை அருகே ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த இளைஞர், நீரில் முழ்கி உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் மிடாப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (36). தந்தையுடன் இணைந்து விவசாயப் பணிகளை கவனித்து வந்த இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. தாயார் கீதா மற்றும் தந்தை ராஜாமணியுடன் வசித்து வந்தார்.



இந்த நிலையில் சுரேஷ்குமார் நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து மடத்துக்குளத்தை அடுத்த சோழமாதேவி பகுதியில் உள்ள அமராவதி ஆற்றில் குளித்துள்ளனர்.

அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற சுரேஷ்குமார் தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளார். அவரைக் காப்பாற்ற நண்பர்கள் முயற்சி செய்தும், முடியாமல் ஆற்று நீரில் மூழ்கியுள்ளார்.

உடனடியாக உடுமலை தீயணைப்புத் துறை மற்றும் மடத்துக்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் அமராவதி ஆற்றில் மிதவைகள் உதவியுடன் தேடினர்.



நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு ஆற்றில் மூழ்கிய சுரேஷ்குமாரை சடலமாக மீட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மடத்துக்குளம் போலீசார் சுரேஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Newsletter

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...