கோவையில் குரும்பா சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பழங்குடியின பட்டியலில் சேர்க்கக் கோரிக்கை!

குரும்பா இன மக்களை பழங்குடியின பட்டியலில் சேர்த்து எஸ்.டி. சான்றிதழ் வழங்க வேண்டும், குரும்பா இன மக்களுக்கு அரசியல் அதிகாரத்தில் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை: அரசியல் பிரதிநிதித்துவம், எஸ்டி சான்றிதழ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குரும்பா சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோவை மாவட்ட குரும்பா சங்கம் சார்பாக தலைவர் கல்பனா வேலுச்சாமி தலைமை வகித்தார். குரும்பா குரும்மன்ஸ் சமுதாய மக்களை உடனடியாக பழங்குடி மக்களின் பட்டியலில் சேர்த்து ST சான்றிதழ் வழங்கிட வேண்டும், ஆடு வளர்ப்போர் நலவாரியம் அமைத்து தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளை குரும்பா குரும்மன்ஸ் சமுதாயத்திற்கே கொடுத்திட வேண்டும், ஆடு மேய்க்கும் மற்றும் கம்பளி நெய்தல் போன்ற எங்களது குலத்தொழில் அழிந்து வருவதால் ஆராய்ந்து உரிய காப்பீடு திட்டம் அமைக்க வேண்டும், குரும்பா குரும்மன்ஸ் சமுதாயத்திற்கு அரசியல் அதிகாரத்தில் உள்ள பிரதிநிதித்துவம் கொடுத்து தமிழ்நாடு மாநில அளவில் தகுதியுள்ள குரும்பா குரும்மன்ஸ் இன மக்களுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் உரிய அங்கீகாரம் வழங்கிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.



மேலும், 50 லட்சம் பேர் உள்ள சமுதாயத்திற்கு உரிய அரசு அங்கீகாரம் கொடுக்காமல் இருப்பது, சமுதாயத்தை புறக்கணிப்பதற்கு சமம் என்றும் ஆகவே உடனே அரசியல் அங்கீகாரம் வழங்கிட அனைத்து அரசியல் கட்சிகளையும் அரசையும் வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட குரும்பர் சமுதாயத்தை சார்ந்தவர்கள் பதகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில், செயலாளர் பொன் சுரேஷ்பாபு, பொருளாளர் கிருஷ்ணசாமி, குரும்பா சங்கத்தின் இளைஞர் அணி செயலாளர் தேவராஜ், இளைஞர் அணி அமைப்பாளர் முருகேஷ் மற்றும் ராஜேஷ் துணைத்தலைவர், துணைச் செயலாளர்கள் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...