மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிமுக நிர்வாகிகள் இன்று அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள அதிமுக தலைமை அழுவலகமான இதய தெய்வம் மாளிகையில் அதிமுக அமைச்சர் அம்மன் கே.அர்ஜுனன், நாடாளுமன்ற உறுப்பினர் நாகராஜன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் அதிமுக அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இனிப்புகள் வழங்கியும், அன்னதானம் செய்தும் அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.