பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுமுறை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக உயர்த்தப்படும்- பண்டாரு தத்தாத்ரேயா

பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுமுறை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக உயர்த்தும் சட்டம் விரைவில் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார்.

கோவையில் உள்ள தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கமான சைமா சங்க நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா அலுவவலர்கள் மற்றும் ஊழியர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த தொழில்துறையினர் கலந்து கொண்டு அரசிடம் வைக்கவுள்ள கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சரிடம் அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தத்தாத்ரேயா கூறுகையில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுமுறை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக உயர்த்தும் சட்டத்திற்கு மாநிலங்களவையில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது எனவும், இதற்கான மசோதா விரைவில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டு சட்டமாக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

காலத்திற்கு ஒவ்வாத 44 தொழிலாளர் நலச்சட்டங்களை 4 சட்டங்களாக ஒருங்கிணைக்கும் சட்ட மசோதா வரவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறிய அவர், வரவிருக்கும் கூட்டத்தொடரில் சம்பளம், நிறுவனத்துடன் ஒத்துழைப்பு என இரண்டு மசோதாக்களும் அடுத்த கூட்டத்தொடரில் சமூக பாதுகாப்பு மற்றும் வேலை சூழல், உடல்நலன், பணி பாதுகாப்பு ஆகியவை அடங்கிய இரண்டு சட்டங்களும் அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

பிரதான் மந்திரி ரோஸ்கார் யோஜனா திட்டம் மூலம் புதிதாக பணியில் இணையும் ஜவுளித்துறை ஊழியர்களுக்கு 12 சதவிகித பி.எப் தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் எனக் கூறிய அவர், இது வழக்கமான 8.33 சதவிகிதத்தை விட கூடுதல் என்பதால் ஜவுளித்துறையில் கூடுதல் பணிகள் மற்றும் தொழில்களை உருவாக்க இது உதவும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...