ராகுல் காந்தி தகுதிநீக்கத்தை ரத்து செய்க! - காங்கிரஸ் கட்சியினர் பிரதமருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்!

ராகுல் காந்தியின் எம்.பி பதவியை தகுதி நீக்கத்தை ரத்து செய்யக்கோரி பொள்ளாச்சி தலைமை தபால் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: ராகுல்காந்தியின் எம்.பி பதவியை தகுதி நீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரதமருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிப்பை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல் காந்தியின் பதவியை பறித்து ஜனநாயக படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், MP பதவி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.



பொள்ளாச்சி மத்திய தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராகவும் பிரதமர் மோடியை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.



பின்னர் ராகுல் காந்தியின் எம்பி பதவி நீக்கத்தை ரத்து செய்ய கோரி மோடிக்கு எழுதிய கடிதத்தை காங்கிரஸ் கட்சியினர் தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இளம் தலைவர் ராகுல் காந்தியின் எம்பி பதவி நீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் இல்லை என்றால் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் காங்கிரஸ் கட்சியினர் எச்சரிக்கை விடுத்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...