இரும்பு உருக்காலைக்கு எதிராக பொதுமக்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் - தனியரசு ஆதரவு!

பல்லடம் அருகே அனுப்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் இரும்பு உருக்கு ஆலைக்கு எதிராக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களை சந்தித்து கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு ஆதரவளித்தார்.


திருப்பூர்: பல்லடம் அருகே கிராம மக்கள் போராட்டத்திற்கு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு ஆதரவு அளித்தார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அனுப்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் தனியார் இரும்பு உருக்கு ஆலையால் சுற்றுச்சூழல் மாசடைவதாகவும், கால்நடை வளர்ப்பு பாதிக்கப்படுவதாகவும், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு சுவாசக் கோளாறு, புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறி அனுப்பட்டி கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊருக்குள் பந்தல் அமைத்து 24வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அனுப்பட்டி கிராம மக்கள், நேற்று குழந்தைகள், பெண்கள் உட்பட 21 பேர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.

தற்காலிகமாக இரும்பு உருக்கு ஆலையை மூட வட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்த நிலையில், நிரந்தரமாக ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்று வரும் இந்த போராட்டத்திற்கு பல்வேறு விவசாய சங்கங்களும், அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.



இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு மற்றும் கட்சி நிர்வாகிகள் போராட்டம் பந்தலுக்கு நேரில் வந்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

மேலும் கிராம மக்களோடு போராட்ட பந்தலில் அமர்ந்து ஆலையை மூடக்கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்து தனியரசு பேசியதாவது, அனுப்பட்டி கிராம மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்களது கோரிக்கையை துறை சார்ந்த அமைச்சர்கள் உடனடியாக பரிசீலனை செய்து நிறைவேற்ற வேண்டும். மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஆலையை மூட தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...